History
HISTORY
கல்லூரியின் வரலாறு
அமரர். வேதாரணியர் வீரசிங்கம் என்பவர் மீசாலை பிரதேசத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் சொந்த வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை மாணவர் தொகை படிப்படியாக அதிகரிக்க இடநெருக்கடி ஏற்பட்டமையால் கண்டி வீதியின் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் விசாலமான கொட்டில்களை அமைத்து பாடசாலையினை தொடர்ந்து நடாத்தி அப் பாடசாலையினை நிர்வகிக்க ஒரு பரிபாலன சபை (அறங்காவலர் சபை) நிறவினார்.
1919 அளவில் வீரசிங்கனார் இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தியதும் பாடசாலை நிர்வாக விடயமனைத்தும் அறங்காவலர் சபையினரே கவனித்து வந்தார்கள். இவர்களது முயற்சியால் 1926 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வீரசிங்கம் சைவ வித்தியாசாலை என்ற பெயருடன் முறையாக ஒரு பாடசாலையாக அமைக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு அரசினால் பொறுப்பேற்க்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.
1971 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) கலைப்பிரிவும் 1975 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) வர்த்தகப் பிரிவும் ஆரம்பமாகியது. 1998 ஆம் ஆண்டு நவோதயா திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டதுடன் “நவோதயா பாடசாலை” என்ற பெயரயும் பெற்றது. அத்துடன் 2004 ஆம் ஆண்டு “ Light house” பாடசாலையாகவும் தெரிவுசெய்யப்பட்டது. 01.05.2011 ஆம் ஆண்டு 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டது. 16.02.2012 இல் யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தொடக்க காலத்தில் மாணவர் தொகை மிகக் குறைவாக இருந்த போதிலும் தற்போது 800 ற்கு மேற்பட்ட மாணவர்களையும் 60 ற்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் பல கல்வி சாரா ஊழியர்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது. அத்துடன் விஞ்ஞான ஆய்வுகூடம், விவசாய ஆய்வுகூடம், கணினிக்கற்கை நிலையம், நூலகம் போன்ற பிரிவுகளையும் தன்னகத்தே உள்ளடக்கி சிறந்த கல்விப்பணியாற்றி வருகின்றது.
Teachers
Students
Old Students
Clubs

நோக்கு
தென்மராட்சி பிரதேசத்தில் முன்னணி மிக்க தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல்

பணிக்கூற்று
எமது பிரதேசத்தின் பண்பாட்டு கலாச்சாரத்தை பேணும் வகையில் மாணவர்களின் கணித விஞ்ஞான ஆங்கில தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி நவீன உலகிற்கு ஏற்ற பிரஜைகளை உருவாக்குதல்