Meesalai Veerasingam Central College

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி

Rules And Regulations

மாணவர் ஒழுக்க கோவை

 பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை சிறந்த ஒழுக்கமுள்ள சமூகப் பிரசையாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே மாணவர் ஒழுக்க கோவையாகும். இவ் ஒழுக்க கோவையை பின்பற்றுவதன் ஊடாக கல்லூரியின் பெயரையும், புகழையும் உயர்நிலைக்கு இட்டுச் செல்வதோடு உங்களின் கல்வி, ஒழுக்கம் என்பன சிறந்து விளங்கி வாழ்வில் உயர்வடைய வாழ்த்துகின்றோம். 
 
01. பாடசாலைக்கு வருகை தரல் 
1.மாணவர் தமது மாணவர் அறிகைப் புத்தகத்தை தினமும் பாடசாலைக்குகொண்டுவருதல்   கட்டாயமானதாகும்.(இதற்காக தனியான ஒரு சிறிய கொப்பியை பேண முடியும் . இதன் முதற் பக்கத்தில் மாணவர் பற்றிய விபரம் , பெற்றோர் மாதிரி ஒப்பம் இருத்தல் வேண்டும் . மாணவர் வருகை தராத நாட்கள் திகதி வாரியாக குறிப்பிட்டு காரணம் எழுதி பெற்றோர் ஒப்பம் இடுதல் வேண்டும். 
 
2.பாடசாலை சீருடையின்றி பாடசாலை வேளையில் பாடசாலை வளாகத்தினுள்    மாணவர்  எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 
3.தடைசெய்யப்பட்ட பொருட்கள்,போதையை ஏற்படுத்தும் பொருட்கள் தீய   நடத்தைகளைத் தூண்டும் பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள், இசைஉபகரணங்கள்,நிழற்படக்கருவிகள்,கணனியுடன் தொடர்புடைய இலத்திரனியல் சாதனங்கள்  பாடசாலை வளாகத்தினுள் எடுத்துவர முடியாது.
4.காலை 7.15 க்கு முன் பாடசாலைக்கு வருகை தருதல் வேண்டும்.வகுப்பறை உட்புற ,வெளிப்புற சுத்தம் பேணப்பட வேண்டும்.
 
02. பாடசாலைக்கு வருகை தராமை
1. பாடசாலைக்கு வருகை தராமை தொடர்பாக மாணவர் அறிக்கைப் புத்தகம் ஊடாக    வகுப்பாசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாதவர்கள்     காரணத்தை  மாணவர் அறிக்கைப் புத்தகம் ஊடாக வகுப்பாசிரியரி;ன்    அவதானத்திற்கு கொண்டு வருதல்  அவசியமாகும்.
2.தொடர்ச்சியாக மூன்று அல்லது இரு கிழமைகளில் மூன்று அல்லது மூன்று நாட்களிற்கு மேல் சமூகமளிக்காதவர்கள் பெற்றோருடன் வருகை தரல் வேண்டும்.தேவைப்படுமிடத்து    மருத்துவச் சான்றிதழ் கோரப்படும்.
 
03. தாமதமாக வருகை தரல்
1.ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர்கள் மேற்பார்வையின் கீழ் மாணவர் தலைவர்களால்                  தாமதமாக  வரும் மாணவர்கள் பதியப்படுவர். 
 
2.இரு வாரங்களுக்குள் குறைந்தது மூன்று நாட்கள் தாமதமாக வரும் மாணவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அழைக்கப்படுவர்.
 
04. வகுப்பறையை விட்டு வெளியேறல்
1.காலை 7.30 மணி தொடக்கம் 10.30 மணி வரையும் 10.50 தொடக்கம் 1.30 மணி                   வரையும்   வகுப்பறையில் இருத்தல் வேண்டும். (அசாதாரண சந்தர்ப்பங்கள் தவிர)
  விசேட அலகுகளுக்காக பாடவேளை செல்லும் மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் செல்ல வேண்டும்.
2.மாணவர்களுக்கான இடைவேளை நேரம் மு.ப 10.30 – 10.50 இடைவேளை தவிர்ந்த  ஏனைய நேரங்களில் வகுப்பை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியை       மாணவர்கள் பொறுப்பாசிரியரிடம் பெற்றிருக்க வேண்டும்.
 
3.வகுப்பறையை விட்டு தேவை கருதி வெளியேறும் மாணவர்கள் அனுமதி அட்டையை (ழுருவு Pயுளுளு) தரித்திருத்தல் அவசியம்.
 
05. பாடசாலையில் இருந்து வெளியேறல்
1.பாடசாலை நிறைவடைதலின் (Departure) போது மாணவர் பின்வரும் விடயங்களை   கருத்திலெடுத்து செயற்பட வேண்டும். 1st Bell – தயாராகுதல், 2nd Bell  –    அமைதியாகுதல், 3rd Bell  – பாடசாலைக்கீதம் இசைத்தல், வரிசையாகச் செல்லுதல்.
2.பாடசாலை நேரத்தில் மாணவர் அனுமதியின்றி பாடசாலையை விட்டு வெளியேற  முடியாது.
3.பாடசாலையை விட்டு பாடசாலை நேரத்தில் மாணவர் வெளியேறுவதாயின் பெற்றோர்   அல்லது பாதுகாவலர் பாடசாலைக்கு வருகை தந்து அனுமதி பெறுதல் வேண்டும். உரிய   பதிவேட்டிலும் மாணவர் அறிக்கைப் புத்தகத்திலும் காரணத்தை காட்டி பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்பமிட வேண்டும்.
4.பாடசாலை நேரத்தில் முறையான அனுமதியின்றி செல்லும் மாணவர்கள் இனங்காணப்படும்  சந்தர்ப்பங்களில் குறித்த மாணவர்களது பெற்றோருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். 
 
06. ஆண் மாணவர்களுக்கான சீருடை
I.காற்சட்டை
1. காற்சட்டை –     அரைக்காற்சட்டை (Shorts) – தரம் 6, 7, 8, 9 வகுப்பு மாணவர்கள்
நீளக்காற்சட்டை (Trouser) – 10, 11, 12, 13 வகுப்பு மாணவர்கள்
2. இடுப்பு தேவையான அளவு இறக்கமானதாகவும், தொப்புள்வரை உயரமானதாகவும்         இருத்தல் தொடைப்பகுதியிலிருந்து 2-3 அங்குலம் பெரிதாக இருத்தல்.
3. இரண்டு புறமும் இரண்டு சுருக்கு கட்டாயம் இடப்பட்டிருக்க வேண்டும் 
4. தொடைப்பகுதியிலிருந்து 2-3 அங்குலம் பெரிதாக இருத்தல் வேண்டும்  
5. பக்கப் பொக்கற் தைக்கப்பட்ட காற்சட்டைகள் மட்டும் அனுமதிக்கப்படும். பின்புறம் ஒரு      பொக்கற் மட்டுமே அனுமதிக்கப்படும்.
6. அரைக்காற்சட்டை முழங்காலுக்கு மேல் ஒரு அங்குலம் வரையான நீளத்தை கொண்டிருத்தல்  வேண்டும்.
7. தரம் 10, 11, 12, 13 மாணவர்களின் காற்சட்டையானது காலின் கீழ்ப்பகுதி இழுத்தப்பார்க்கும் போது குறைந்தது  3 அங்குலமாவது  இருத்தல் வேண்டும்.
 
II.மேற்சட்டை (Shirts)
1. மாணவ தலைவர்கள் தவிர ஏனையோர் முழு நீளக்கை மேற்சட்டை அனுமதிக்கப்படமாட்டாது (மாணவர் தலைவர்கள் முழு நீளக்கையை மடித்து விடக்கூடாது.)
2. அரைக்கைச் சட்டை (ர்யடக ளுடநநஎந ளூசைவ) நான்கு அங்குலம் மட்டும் முழங்கையிலிருந்து மேலே உயர்ந்திருத்தல் வேண்டும் கைகளுக்கு இடையில் இரண்டு அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும்
3. பொத்தான் தெறி , பட்டி (டீரவவழn டீழசனநச) தைத்தல் அனுமதிக்கப்படமாட்டாது.
4. அகலம் உடம்பிலிருந்து இழுத்துப் பார்க்கும்போது குறைந்தது நான்கு அங்குலமாவது இருத்தல் வேண்டும்.
5. உயரம் இடுப்பிலிருந்து ஆகக் குறைந்தது எட்டு அங்குலம் கீழ்நோக்கி தாழ்ந்திருத்தல் வேண்டும்.
6. கழுத்து கொலருக்குரிய பொத்தான் பூட்டக்கூடியதாக தைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
7. கையின் அகலம் கையில் இருந்து இழுத்துப் பார்க்கும்போது இரண்டு அங்குலமாவது இருத்தல் வேண்டும்.
8. கசங்கிய, அழுக்கடைந்த சீருடைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
 
III.கழுத்துப்பட்டி (TIE);
  
1. கொலர் பொத்தான் பூட்டப்பட்டு இரட்டை மடிப்பு போடப்பட்டு (னுழரடிடந மழெவ) கழுத்துப்பட்டி      அணிய வேண்டும்.
2. காட்சைட்டையின் இடுப்பு பட்டியை கழுத்துப்பட்டியின் நுனி தொடக்கூடியதாக இருத்தல்      வேண்டும் .
 
 
 
IV.காலணி (ஆண்களுக்குரியது) 
 
1. முழுமையாக கறுப்பு நிறமாக இருத்தல் வேண்டும்.
2. நூலால் கட்டக்கூடியதாகவோ (டுயளந வுலிந) அல்லது ஒட்டக்கூடியதாகவோ (ளுவiஉம வுலிந)           இருத்தல்  வேண்டும்.
3. முன்பகுதி தரைக்குச் சமாந்தரமாகக் காணப்படுதல் வேண்டும்.
4. முன் பகுதி பெட்டி வடிவானதாக (டீழஒ ளாயிந) இருத்தல் வேண்டும்.கூரானதாக இருத்தல்     கூடாது.
5. தினமும் துடைத்து அல்லது கழுவி அணிந்திருத்தல் வேண்டும்.
6. மோசமாகக் கிழிந்த அல்லது சேதமுற்ற காலணிகள் அணிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
7. எக்காரணம் கொண்டும் மேற்குறிப்பிட்ட காலணிகள் தவிர்ந்த ஏனைய காலணிகள் யாவும்     அனுமதிக்கப்படமாட்டாது.
 
07. பெண் மாணவிகளின்  சீருடை 
 
I. சட்டை (Frock)
 
1. முழங்கை மடிந்த நிலையில் முழங்கை கீழ் விளிம்புடன் இடுப்புப் பொருத்து  அமைதல் வேண்டும்.
2. இடுப்புப்பட்டி 1 1/2 அங்குல அகலமுடையதாக இருக்க வேண்டும்
3. 1 1/2 அங்குல அகலமுடைய முன்புறமும் பின்புறமும் தேவையான சுருக்குகளுடன் சீருடையின் கீழ்ப்பகுதி (பாவாடை) அமைய வேண்டும்.
4. முழங்காலின் கீழ்ப்பகுதியில் இருந்து ஒரு அங்குலம் கீழ்நோக்கி சீருடையின் கீழ்ப்பகுதி  இறக்கம் இருக்க வேண்டும்.
5. சீருடையின் கைப்பகுதி முழங்கையில் இருந்து மேல் நோக்கி 4 அங்குலம் வரை இறக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
6. பாவாடையின் கீழ் மடிப்பு 1 1ஃ2 அங்குலம் கொண்டதாகவும், கைமடிப்பு ¾ -1 அங்குலம் கொண்டதாக இருக்க வேண்டும்.
7. கசங்கிய அழுக்கடைந்த சீருடைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
 
II. கழுத்துப்பட்டி (TIE)
1. கொலர் பொத்தான் பூட்டப்பட்டு இரட்டை மடிப்பு போடப்பட்டு (னுழரடிடந மழெவ) கழுத்துப்பட்டி அணிய வேண்டும்.
2. சட்டையின் இடுப்புப்பட்டியின் கீழே  கழுத்துப்பட்டியின் நுனி 2 அங்குலம் தாழ்ந்து இருத்தல் வேண்டும். 
 
08. ஆண் மாணவர்களுக்கான சிகை அலங்காரம் (Hair Style) மற்றும் அணிகலன்கள்
 
1. தலை முடி எண்ணெய் பூசி கன்ன உச்சி பிரித்து ஒழுங்காக  சீவப்பட்டதாக இருத்தல்            வேண்டும்.தலை மயிரின் நீளம் 3உஅ  இலும் குறைந்ததாக இருக்க வேண்டும்.எண்ணெய் தவிர்ந்த ஏனைய திரவங்கள் (ஜெல், சாயம், நீர்) பூசுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
2. பின் புறம் ப வடிவத்தில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் 
3. சேட் கொலறில் இருந்து தலைமயிர் 1 அங்குலத்திலும் கூடிய இடைவெளியிலிருத்தல் வேண்டும்.
4. ளுனைந உரவ ப வடிவத்தில் காது துவார மட்டத்தில் இருத்தல் வேண்டும். அதன் கீழ் நீண்டிருத்தல் கூடாது.
5. கண் இமையில் திருத்தங்கள்  செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
6. ஆண் மாணவர் தோடு, மோதிரம் , காப்பு ,கழுத்துச் சங்கிலி ஃ மாலை அணிவது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
7. தரம்10 இற்கு மேற்பட்ட பொருத்தமான மாணவர்கள் ஒவ்வொருநாளும் முகச்சவரம்  செய்து வரல் வேண்டும்.
8. குங்குமம் அல்லது வேறு நிறப்பூச்சுக்கள் நெற்றியில் குறியாக அணியக்கூடாது.
9. பச்சை குத்துதல் , கைகளில் நிறப்பூச்சு பூசுதல் முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும்.
10. கையில் ஆலய நூல் கட்டுவதாயின் ஒரு நூல் மட்டும் அணியலாம்.
11. மிக ஒடுக்கமான கறுப்பு பட்டியுள்ள சாதாரண மணிக்கூட்டினை தரம் 10 ற்கு மேற்பட்ட மாணவர்கள் தேவைப்படுமிடத்து அணியலாம்.
 
09. பெண் மாணவர்களுக்கான சிகை அலங்காரம் (Hair Style) மற்றும் அணிகலன்கள்
 
1. தலைமுடி எண்ணெய் பூசி ஒழுங்காக அழகாக சீவப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
2. எண்ணெய் தவிர்ந்த ஏனைய திரவங்கள் (ஜெல், சாயம், நீர்) பூசுவது கண்டிப்பாகத்        தவிர்க்கப்படல் வேண்டும்.
3. பின்னல் இடுப்புப்பட்டிக்கு மேல் இருத்தல் வேண்டும். நீளமான கூந்தலாயின் இடுப்புப்பட்டி      மட்டத்திற்கு மடித்துக் கட்ட வேண்டும்.
4. பின்னல்கள் பின்புறமாக இருப்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.முன்புறமாக விட்டு நிற்றல் தவிர்க்கப்பட வேண்டும்.
5. தலையின் முன்புறம் கட்டையாக கூந்தலைக் கத்தரிப்பது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். 
6. அழகு நிலையங்களில் அல்லது வீட்டில் கூந்தலின் தன்மையை மாற்றியமைக்கும் செயற்பாடுகள்  (Pநசஅiபெஇ ஐசழniபெ) முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
7. கண்புருவங்கள், இமைகள் திருத்தப்படுவது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
8. மூக்குத்தி அணிதல் தவிர்க்கப்பட வேண்டும்.
9. சிறிய தோடு தவிர்ந்த ஏனைய(சங்கிலி,மோதிரம்,காப்பு)அணிகலன்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
10. கிறீம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் éசுவது தவிர்க்கப்பட வேண்டும்.
11. வெள்ளைச் சப்பாத்து சொக்ஸ் அணிதல் வேண்டும்.
12. குங்குமம் அல்லது வேறு நிறப்பூச்சுக்கள் நெற்றியில் குறியாக அணியக்கூடாது.
13. பச்சை குத்துதல் , கைகளில் நிறப்பூச்சு பூசுதல் முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும்.
14. கையில் ஆலய நூல் கட்டுவதாயின் ஒரு நூல் மட்டும் அணியலாம்.
15. மிக ஒடுக்கமான கறுப்பு பட்டியுள்ள சாதாரண மணிக்கூட்டினை தரம் 10 ற்கு மேற்பட்ட மாணவர்கள் தேவைப்படுமிடத்து அணியலாம்.
 
10. பாடசாலைச் சொத்துக்கள் 
 
1. பாடசாலைச் சொத்துக்களைப் பேணிப் பாதுகாப்பது மாணவர் கடமையாகும்.
2. பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம்ஃநட்டம் பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ ஏற்படுத்தப்பட்டால் சேதப் பெறுமதியின் இரட்டிப்பு மடங்குப் பெறுமதியான வேலை இரு கிழமைகளுக்குள் சீர் செய்யப்பட வேண்டும். 
    
  
 
Scroll to Top